கோவையில் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த திருடனை கையும் களவுமாகப் பிடித்த போலீசார்.!!

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தொழிலாளியிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.


கோவை: கோவையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தொழிலாளியிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கோவையை அடுத்துள்ள வீரபாண்டி ஐயா சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமன் வயது 35, கூலித்தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக காந்திபுரம் சென்றார். அங்கிருந்து பேருந்தில் வீடு திரும்பினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தில் நின்றுகொண்டு வந்தார்.

அவர் மீது ஒருவர் மோதிக் கொண்டே வந்தார். இந்த நிலையில் சின்ன தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பஸ் நின்றதும் ராமன் இறங்கினார். அப்போது அவரை இடித்துக் கொண்டு வந்தவர். திடீரென அவரை தள்ளி விட்டு இறங்கினார்.

இதனால் சந்தேகமடைந்த ராமன் தனது மேல் பாக்கெட்டை பார்த்தார். தான் வைத்திருந்த பணத்தை காணவில்லை. உடனே அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டார். திருடன் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினான். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார். ஓடி அவனை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சின்ன தடாகம் குட்டை வழியைத் தேர்ந்த பாப்பன் என்கிற ராஜேந்திரன் 37, என்பதும் இவர் மீது ஏற்கனவே கோவில்பாளையம் மற்றும் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...