கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.53-லட்சம் இருந்தது. பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 53.50 லட்சம் இருந்தது.
வடவள்ளிமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.
வடவள்ளிமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.