மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.53-லட்சம் உண்டியல் காணிக்கை.!!

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.53-லட்சம் இருந்தது. பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 53.50 லட்சம் இருந்தது.

வடவள்ளிமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 53.50 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 53 லட்சத்து, 50 ஆயிரத்து, 784 ரூபாயும், 134 கிராம் தங்கமும், 2,890 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

பழனி பக்தர்கள் பேரவையினர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பொது உண்டியல் எண்ணி முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டதால், திருப்பணி, அன்னதானம், கோசாலை உண்டியல்கள் எண்ணப்படவில்லை.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...