மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 12 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கு கட்டிய பின், 31 ஏக்கர் மட்டுமே உள்ளது. மொத்தம், 15 ஏக்கரில், கட்டடங்கள் உள்ளன.ஐந்து ஏக்கரில் மரம் வளர்க்கிறோம். எட்டு ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளது. கல்லூரி ஆட்சி மன்றக்குழு, நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. கூடுதலாக, 20 வகுப்பறை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி தேவைக்கு இடப்பற்றாக்குறையாக இருக்கும் போது, 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 12 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கு கட்டிய பின், 31 ஏக்கர் மட்டுமே உள்ளது. மொத்தம், 15 ஏக்கரில், கட்டடங்கள் உள்ளன.ஐந்து ஏக்கரில் மரம் வளர்க்கிறோம். எட்டு ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளது. கல்லூரி ஆட்சி மன்றக்குழு, நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. கூடுதலாக, 20 வகுப்பறை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி தேவைக்கு இடப்பற்றாக்குறையாக இருக்கும் போது, 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.