கவுண்டம்பாளையம் அடுத்த காளிபாளையம் செங்குட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கவுண்டம்பாளையம் அடுத்த காளிபாளையம் செங்குட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த காளிபாளையம் செங்குட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் அப்பா நாயுடு என்பவரின் மகன் மாரிசாமி (65). இவர் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்தாரோடு சென்றுவிட்டார்.
மாரிசாமி தனது காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்திலிருந்து அவரது மகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மாரிச்சாமி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த காளிபாளையம் செங்குட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் அப்பா நாயுடு என்பவரின் மகன் மாரிசாமி (65). இவர் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்தாரோடு சென்றுவிட்டார்.
மாரிசாமி தனது காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்திலிருந்து அவரது மகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மாரிச்சாமி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.