குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில், கோவை பெ.நா. பாளயத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை, லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டது தொடர்பாக என்ஜினீயர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதுடன், லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை புழக்கத்தில் விடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்பவர்கள், தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, தமிழகம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய என்ஜினீயர் வீட்டிற்கு சி.பி.ஐ.அதிகாரி மாணிக்கவேல் தலைமையில் 4 பேர், நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில், அவர் வீட்டில் இருந்து லேப்டாப் , செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் , செல்போனை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே, மேல் நடவடிக்கை எடுப்பார்கள், என்றனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை புழக்கத்தில் விடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்பவர்கள், தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, தமிழகம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய என்ஜினீயர் வீட்டிற்கு சி.பி.ஐ.அதிகாரி மாணிக்கவேல் தலைமையில் 4 பேர், நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில், அவர் வீட்டில் இருந்து லேப்டாப் , செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் , செல்போனை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே, மேல் நடவடிக்கை எடுப்பார்கள், என்றனர்.