கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை இன்று துவக்கினர்.
கோவை: குழந்தைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் குழந்தை நல ஆணைய அலுவலர்கள், மாணவி தற்கொலை சம்பவம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்வுள்ளனர்.