திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து இலை தழைகளை ஆடையாக அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்.!!

நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலை தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலை தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வரக் கூடிய சூழ்நிலையில், பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 50-ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இது குறித்து, ஏற்கனவே தொழில் துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியும், எந்த வித நடவடிக்கையும், எடுக்காத சூழலில் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி பருத்தி பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவாக முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நின்று போகும் சூழலில் மீண்டும் கற்கால மனிதன் போல இலை தழைகளை ஆடையாக அணியும் சூழல் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் இலை தழைகளை ஆடையாக அணிந்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...