வேளாண்மை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.‌


சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ திருச்சி தர்மலிங்கம்‌ வேளாண்மை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான மையம்‌, புதுக்கோட்டை வம்பன்‌ தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களுடன்‌ கூடிய நிர்வாக கட்டிடம்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ படிப்பு மையம்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌ பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள மாணவியர்‌ படிப்பு மையம்‌, விரிவுரை அரங்கம்‌ மற்றும்‌ தேர்வு அறை ஆகிய கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 16.11.2021 அன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்‌.

இந்நிகழ்வில்‌, தமிழ்நாடு வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌‌, வேளாளர்‌ உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறை செயலாளர்‌ சி. சமயமூர்த்தி இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...