கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு திறந்துவிடப்பட்ட பி.ஏ.பி தண்ணீர் நிறுத்தம் - விவசாயிகள் ஏமாற்றம்..!

கோதவாடி குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு திறந்துவிடப்பட்ட பி.ஏ.பி தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தை கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வராததால், கோதவாடி குளத்திற்கு பிஏபி தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு செட்டிக்காபாளையம் மற்றும் வடசித்தூர் கிளை கால்வாய் வழியாக பி.ஏ.பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் கோதவாடி குளம் நிரம்பி விடும் என காத்திருந்தனர்.

ஆனால், பொதுப்பணித்துறையினர் திடீரென பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து வந்த கோதவாடி குளத்திற்கு வந்த தண்ணீரை நிறுத்தியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...