கோதவாடி குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு திறந்துவிடப்பட்ட பி.ஏ.பி தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தை கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வராததால், கோதவாடி குளத்திற்கு பிஏபி தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு செட்டிக்காபாளையம் மற்றும் வடசித்தூர் கிளை கால்வாய் வழியாக பி.ஏ.பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் கோதவாடி குளம் நிரம்பி விடும் என காத்திருந்தனர்.
ஆனால், பொதுப்பணித்துறையினர் திடீரென பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து வந்த கோதவாடி குளத்திற்கு வந்த தண்ணீரை நிறுத்தியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே, குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தை கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வராததால், கோதவாடி குளத்திற்கு பிஏபி தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு செட்டிக்காபாளையம் மற்றும் வடசித்தூர் கிளை கால்வாய் வழியாக பி.ஏ.பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் கோதவாடி குளம் நிரம்பி விடும் என காத்திருந்தனர்.
ஆனால், பொதுப்பணித்துறையினர் திடீரென பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து வந்த கோதவாடி குளத்திற்கு வந்த தண்ணீரை நிறுத்தியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே, குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.