கோவையில் பழுதான சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்..!

பழுதான தண்ணீர்ப் பந்தல், விளாங்குறிச்சி மற்றும் கொடிசியா பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பழுதான தண்ணீர்ப் பந்தல், விளாங்குறிச்சி மற்றும் கொடிசியா சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி 37வது வட்டத்தில் உள்ள பிரதான சாலைகள், உட்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இங்கு புதிய சாலைகள் அமைத்துத்தர வேண்டும். இதேபோன்று இப்பகுதியில் 6 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.

குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்கிற பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மூன்று கடைகளையாவது அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள எஸ் பெண்ட் ரவுண்டானாவை சரி செய்ய வேண்டும். வினோஜிபா நகர் ரேசன் கடையில் குடும்ப அட்டையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. ஆகவே இக்கடையை இரண்டாகப் பிரித்து புதிய ரேசன் கடை ஒன்றை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இது குறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வந்தனர். மேலும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் மக்கள் சபை நிகழ்வில் மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என மார்க்சிஸ்ட் கட்சியின் 37வது வட்டத்தின் கிளைகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக, இன்று கோவை தண்ணீர்ப் பந்தல் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் தலைமை தாங்கினார்.



இதில் பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி மற்றும் கோவிந்தராஜ், சுமதி, ஜோதிபாசு, மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.



முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...