சுமார் 28.14 ஏக்கர் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் வெளியேற்றினர்.
திருப்பூர்: பல்லடத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே திருவேங்கடநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 28.14 ஏக்கர் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த 28.14 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போது அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே திருவேங்கடநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 28.14 ஏக்கர் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த 28.14 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றினர்.
இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போது அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.