மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டல பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம் அனுப்பர்பாளையம், பாலன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல, இப்பகுதியிலுள்ள 30 அடி ஆழமான நீர்த் தேக்க ஓடை உள்ளதாகவும், இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யக் கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம் அனுப்பர்பாளையம், பாலன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல, இப்பகுதியிலுள்ள 30 அடி ஆழமான நீர்த் தேக்க ஓடை உள்ளதாகவும், இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யக் கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.