கோவையில் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்ட காவல்துறை முடிவு..!

அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் அறை முன்பு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் நோட்டீஸ் ஒட்டப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அந்த ஆசிரியர் குறித்து மாணவி பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும், மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்த நிலையில், அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் அறை முன்பு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அதில் போக்சோ என்றால் என்ன? அந்தக் குற்றத்திற்குக் கிடைக்கும் தண்டனை, மாணவிகள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்த வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...