கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் - ரயில் பயணிகள் வலியுறுத்தல்..!

கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது


கோவை: கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டி சாலையில் ரயில் நிலையம் உள்ளது. மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிணத்துக்கடவு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், பயணச்சீட்டு முன்பதிவு மையம் தொடங்கப்படாமல் இருப்பதால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கோவை மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதால் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்கினால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரயில் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும், எனவே கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...