கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் - ரயில் பயணிகள் வலியுறுத்தல்..!

கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது


கோவை: கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டி சாலையில் ரயில் நிலையம் உள்ளது. மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிணத்துக்கடவு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், பயணச்சீட்டு முன்பதிவு மையம் தொடங்கப்படாமல் இருப்பதால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கோவை மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதால் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்கினால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரயில் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும், எனவே கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...