முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவை: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காகச் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில்;

செந்தில் பாலாஜி கோவைக்கு வந்த பொழுது சிறிது தயக்கம் இருந்தது. அவர் வந்தவுடனேயே, அவருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுதான் அவரை உற்றுக் கவனித்தேன். அவர், தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து செயல்படுகின்றார்.
கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், திமுகவிற்கு எதிர்க் கருத்தை பரப்பும் நிலை எப்போதும் இருந்து வந்தது. இந்தியாவில் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவியல் ரீதியாக பின்னடைவை அதிமுகவிற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியல் கருத்தை ஏற்படுத்த வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில்;
செந்தில் பாலாஜி கோவைக்கு வந்த பொழுது சிறிது தயக்கம் இருந்தது. அவர் வந்தவுடனேயே, அவருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுதான் அவரை உற்றுக் கவனித்தேன். அவர், தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து செயல்படுகின்றார்.
கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், திமுகவிற்கு எதிர்க் கருத்தை பரப்பும் நிலை எப்போதும் இருந்து வந்தது. இந்தியாவில் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவியல் ரீதியாக பின்னடைவை அதிமுகவிற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியல் கருத்தை ஏற்படுத்த வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.