கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த காவல் துறையினர் முடிவு.

கோவையில் தற்கொலை செய்து கொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை உறுதிபடுத்த, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவையில் பாலியல் தொல்லையால், 12 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முன்னதாக அந்த மாணவி படித்த முன்னாள் பள்ளியான, சின்மயா வித்தியலாயவில் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அந்த மாணவியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஒரு துண்டு சீட்டில் அந்த மாணவி மூவரின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும். இந்த கடிதம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. ஒரு புறம், அந்த கடிதத்தை அந்த மாணவி சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது என்றும் மறுபுறம் அது அந்த மாணவியின் கையெழுத்தே இல்லை என்று முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், மாணவியின் வீட்டில் கைப்பற்றபட்ட கடிதத்தை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை உறுதிபடுத்த இதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும்,

மாணவி அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் தீர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...