கோவை மாணவி தற்கொலை சம்பவம்: அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலே அளித்துள்ளது. அது திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.



கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலே அளித்துள்ளது எனவும் அது திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்தைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.



பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சி.எஸ்.ஆர். நிதிமூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தனியார் உதவ வேண்டும் எனவும், சி.எஸ்.ஆர் பணிகளுக்கு என பிரத்தியேக இணையத்தளம் தயாராகி வருகிறது எனவும் விரைவில் அதை முதல்வர் துவக்கி வைக்க இருக்கின்றார் எனவும், அது நடைமுறைக்கு வரும் போது பள்ளிக்கான சிறிய தேவையும் நிறைவேறும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் உடனடியாக முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உள்ளார் எனவும், ஆனால் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலையே அளித்துள்ளது எனவும் அது திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்தார்.

அதற்குள் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகவும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசின் உதவி எண்ணான 14417 குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது எனவும், மாணவர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து இந்த எண்ணில் அழைத்துச் சொல்லலாம் எனவும், மேலும், பள்ளியில் safety box வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், பள்ளி கூடங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கும் போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நவம்பர் 19 ம் தேதி இத்திட்டத்தைத் தொடங்கும் போது ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக 85% கட்டணம் மட்டுமே வாங்கத் தனியார்ப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும், கட்டணம் செலுத்த முடியாதவர்களிடம் பெறக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்த அவர்,சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகப் புகார் வரும் போது, பள்ளிக்கல்வித் துறை மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மனிதாபிமானமற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் மேல் கேள்விக்குறியை ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...