மழையால் சேதமடைந்த வீட்டிற்கு சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார்.
கோவை: மழையால் வீடு இடிந்து சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ., ஜெயராம் நிவாரண உதவி வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி பாடசாலை வீதியில் உள்ள ஜெகதாம்பாள் என்பவருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த மழையில் இடிந்து சேதமடைந்தது.

தகவலறிந்து நேரில் சென்ற சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி பாடசாலை வீதியில் உள்ள ஜெகதாம்பாள் என்பவருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த மழையில் இடிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து நேரில் சென்ற சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.