வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
கோவை: கோவை அருகே உள்ள வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

குழந்தைகள் எந்த நிலையிலும் மிக தைரியமாக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசினார்.
மாவட்ட போலீசார் சார்பில், குழந்தைகள் தின விழா, பொம்மணம்பாளையத்தில் உள்ள ஆஷ்ரயா பால் பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
குழந்தைகள் தின விழாவை, குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். குழந்தைகளுக்கு, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பரிசு பொருட்களை வழங்கினார்.

இதுகுறித்து எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்கள் பேசுகையில்,
குழந்தை செல்வங்களான நீங்கள், கல்வியை முறையாக கற்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் மிக தைரியமாக இருக்க வேண்டும். உங்களை யாரேனும் அனுமதியின்றி தொட்டால், உடனடியாக ஆசிரியர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
எப்போதும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் செய்வோம், என்றார்.
கூடுதல் எஸ்.பி., சுபாஷிணி, பேரூர் டி.எஸ்.பி., திருமால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


குழந்தைகள் எந்த நிலையிலும் மிக தைரியமாக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசினார்.
மாவட்ட போலீசார் சார்பில், குழந்தைகள் தின விழா, பொம்மணம்பாளையத்தில் உள்ள ஆஷ்ரயா பால் பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
குழந்தைகள் தின விழாவை, குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். குழந்தைகளுக்கு, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பரிசு பொருட்களை வழங்கினார்.
இதுகுறித்து எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்கள் பேசுகையில்,
குழந்தை செல்வங்களான நீங்கள், கல்வியை முறையாக கற்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் மிக தைரியமாக இருக்க வேண்டும். உங்களை யாரேனும் அனுமதியின்றி தொட்டால், உடனடியாக ஆசிரியர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
எப்போதும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் செய்வோம், என்றார்.
கூடுதல் எஸ்.பி., சுபாஷிணி, பேரூர் டி.எஸ்.பி., திருமால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.