கோவை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தல்..!

வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.


கோவை: கோவை அருகே உள்ள வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.



குழந்தைகள் எந்த நிலையிலும் மிக தைரியமாக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசினார்.

மாவட்ட போலீசார் சார்பில், குழந்தைகள் தின விழா, பொம்மணம்பாளையத்தில் உள்ள ஆஷ்ரயா பால் பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

குழந்தைகள் தின விழாவை, குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். குழந்தைகளுக்கு, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பரிசு பொருட்களை வழங்கினார்.



இதுகுறித்து எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்கள் பேசுகையில்,

குழந்தை செல்வங்களான நீங்கள், கல்வியை முறையாக கற்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் மிக தைரியமாக இருக்க வேண்டும். உங்களை யாரேனும் அனுமதியின்றி தொட்டால், உடனடியாக ஆசிரியர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.

எப்போதும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் செய்வோம், என்றார்.

கூடுதல் எஸ்.பி., சுபாஷிணி, பேரூர் டி.எஸ்.பி., திருமால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...