கோவையில் பாரதியார் பல்கலைக்கழக விடுதியின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு..!

விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விடுதியின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் விளையாட்டு துறைக்கான விடுதி உள்ளது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் விடுதியின் பூட்டு உடைந்து கிடந்ததை காவலாளிகள் பார்த்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வடவள்ளி போலீசார் ஆய்வு செய்தனர். பல்கலைக்கழகம் நியமித்துள்ள குழு விசாரணைக்கு பின்னரே முழுமையாக போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், "திருட்டு குறித்து சிறப்பு குழு விசாரித்து வருகிறது. விரைவில் திருடியது யார் என தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...