கோவையில் பாரதியார் பல்கலைக்கழக விடுதியின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு..!

விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விடுதியின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் விளையாட்டு துறைக்கான விடுதி உள்ளது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் விடுதியின் பூட்டு உடைந்து கிடந்ததை காவலாளிகள் பார்த்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வடவள்ளி போலீசார் ஆய்வு செய்தனர். பல்கலைக்கழகம் நியமித்துள்ள குழு விசாரணைக்கு பின்னரே முழுமையாக போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், "திருட்டு குறித்து சிறப்பு குழு விசாரித்து வருகிறது. விரைவில் திருடியது யார் என தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...