பலத்த காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கும் கோவை அரசு மருத்துவமனை- உறவினர்கள் குற்றச்சாட்டு


திருப்பூரில் பலத்த காயமடைந்த நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை கொடுக்காமல் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தேவராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஸ் இவரது நான்கு வயது மகளை அவரது பக்கத்து வீட்டு காரரான அப்பாஸ் என்பவர் குடிபோதையில் கடைக்கு கூட்டி செல்வதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலிஸார் அப்பாஸை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த  சிறுமியை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் காலை 7 மணி முதல் சிறுமிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும், காயத்துடன் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

அதே போல் அப்பாஸை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...