ஓசை அமைப்பின் சார்பில் "சூழல் சந்திப்பு" நிகழ்ச்சி


ஓசை அமைப்பின் சார்பில் இவ்வாண்டின் இறுதி  "சூழல் சந்திப்பு" மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதுரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக Dr.ஈ.விஜயராகவன் கலந்துக் கொண்டு வனவிலங்குகள் மீட்பு பணியில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் மீட்பு பணி குறித்த அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார். இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் சண்முகசுந்திரம் தலைமை தாங்கினார். 



முன்பாக மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முதல்வர் அம்மா அவர்கள் வன பதுகாப்பாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தும், யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கையை பாதுகாப்பதில் பெருந்துணையாக இருந்தார் எனவும் கூறினர்.. மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை அமைப்பின் செய்யது அவர்கள் கூறுகையில், வர்தா புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு மரங்கள்,எனவே வெளிநாட்டு மரங்களை தவிர்த்த மண் சார்ந்த நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும், பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 



இந்நிகழ்ச்சியில் தன்னார்வு தொண்டர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...