பர்கூர் வனச்சரகத்தில் வயிற்றுப்புண் காரணமாக ஆண் காட்டு யானை உயிரிழப்பு


பர்கூர் வனச்சரகம், தென்பர்கூர் காப்புக்காடு பேரதட்டைப்பள்ளம் சரகத்தில் வனத்துறை தனிக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.



இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் பி.ஜி.அருண்லாலின் (பொ) உத்தரவின்படி, இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில், இறந்த ஆண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். இந்த யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...