ஸ்வச் சர்வேக்ஷன் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டுகளில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கொண்டு ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். 



கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 என்பது “புகைப்படம் எடுப்போம்! மாற்றத்தை உறுவாக்குவோம்!” மற்றும் ஸ்வச்சதா செயலி என்பது “நமது கையில் விலையுயர்ந்த ஆயுதம் உள்ளது, புகைப்படம் எடுங்கள், ஸ்வச்சதா செயலி பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியை செலவின்றி தூய்மைப் படுத்துங்கள்” என்று வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்திய பிரச்சார வாகனங்கள் மூலமும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. 

மேலும், இதன் தொடாச்சியாக ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் 250க்கும் மேற்பட்ட கற்பகம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றிய துண்டு பிரசுரத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் இம்மாணவர்கள் வீடு வீடாக சென்று, பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்கு பொது மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களான காந்திபுரம், ஆர்.எஸ்புரம் ஆகிய இடங்களில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதில், துணை ஆணையாளர் காந்திமதி, மத்திய மண்டல உதவி ஆணையர்(பொ)மோகனசுந்தரி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...