காரமடை அருகே சிறுத்தை நடமாட்டம்.. பீதியில் மக்கள்!

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று 2-கன்று குட்டியையும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியைச் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அப்பகுதியில் 4-கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரமடை வன அலுவலர் மனோகர் இடம் கேட்டபோது தற்போது பசு மாடுகள் மற்றும் நாய்களைத் தூக்கிச் சென்றது சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...