சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று 2-கன்று குட்டியையும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியைச் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அப்பகுதியில் 4-கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரமடை வன அலுவலர் மனோகர் இடம் கேட்டபோது தற்போது பசு மாடுகள் மற்றும் நாய்களைத் தூக்கிச் சென்றது சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று 2-கன்று குட்டியையும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியைச் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அப்பகுதியில் 4-கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரமடை வன அலுவலர் மனோகர் இடம் கேட்டபோது தற்போது பசு மாடுகள் மற்றும் நாய்களைத் தூக்கிச் சென்றது சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.