கோவையில் அடிபட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி 7-பவுன் செயின் திருட்டு!

விளாங்குறிச்சி சாலையில் விபத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி 7-பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: விளாங்குறிச்சி சாலையில் விபத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி 7-பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிளம்புடி ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் என்பவரின் மகன் சின்னச்சாமி (69). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவியுடன் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சரவணம்பட்டி அடுத்த விளாங்குறிச்சி சாலையில் வேறு ஒரு வாகனம் சின்னச்சாமி சென்ற பைக் மீது மோதியது. இதில், தடுமாறி சின்னச்சாமியும் அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இதில் சின்னச்சாமி மனைவிக்குத் தலையில் அடிபட்டது.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் சின்னச்சாமி மனைவியை மீட்டனர். உடனடியாக சின்னச்சாமியின் மனைவியை ஆட்டோவில் அங்கிருந்த நபர் ஒருவர் ஏற்றிக் கொண்டு அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சிவா மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி விட்டு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து சின்னச்சாமி தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்த பொழுது மனைவியின் கழுத்தில் அணிந்து இருந்த 7-பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சின்னச்சாமியின் மனைவியை ஆட்டோவில் அழைத்து வந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாகி இருந்தார். இதையடுத்து, சின்னச்சாமி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...