கோவை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு!

சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் திருடு போய் இருப்பது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் திருடு போய் இருப்பது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த பத்தாவது வீதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணி என்பவர் பூசாரியாகப் பணி புரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜைகளை முடித்து விட்டு சுப்பிரமணி கோவிலைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவில் உண்டியல் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.

மேலும் கோவில் உண்டியலில் 20-ஆயிரம் ரூபாய் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கிராமத்தின் தலைவரின் மனைவி லட்சுமி அம்மாள் இதுகுறித்து, ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...