கருமத்தம்பட்டியில் திருட்டு வழக்கில் முன்னாள் ஆயுதப் படை காவலர் கைது!

முன்னாள் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் கருமத்தம்பட்டியில், வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கருமத்தம்பட்டியில், வீடு புகுந்து கொள்ளையடித்த முன்னாள் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா(40). இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2-பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது நிர்மலா தனது குழந்தைகளுடன் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் செந்தில் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு நிர்மலா அடிக்கடி செல்வதில்லை. இதனால் அந்த வீடு பெரும்பாலும் பூட்டிய நிலையிலேயே காணப்படும். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2-பேர் நேற்று இரவு நிர்மலாவின் வீட்டுக்குச் சென்று கதவின் பூட்டை உடைத்தது வீட்டின் உள்ளே சென்றார்.

அப்போது கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் உள்ள நாகராஜ் என்பவர் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தனர். அருகில் உள்ளவர்கள் வருவதை அறிந்த அந்த கொள்ளையர்கள் இருவர் வீட்டிலிருந்த வெள்ளி நகை மற்றும் லேப்டாப், ஆகியவை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

கொள்ளையர்கள் 2-பேரையும் துரத்தி பிடிக்க அருகிலிருந்தவர்கள் முயற்சித்தனர். அப்பொழுது ஒருவர் ஓடி விடவே மற்றொரு கொள்ளையனைப் பிடித்தனர். இதனை அடுத்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் காவல்துறையினர் அந்தக் கொள்ளையனிடம் இருந்த லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் வேடப்பட்டியை சேர்ந்த முனிஸ்வரன் (வயது 39) என்பதும் இவர் ஆயுதப் படையில் காவலராக இருந்த போது திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

தப்பி ஓடிய மற்ற ஒருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ்காரராக இருந்தவர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, இதே வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...