கோட்டூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க.,வினர் 300-பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்.!

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க வில் இருந்து விலகி 300-பேர் தி.மு.க வில் இணைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி 300-பேர் தி.மு.கவில் இணைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி வால்பாறை சட்டமன்ற தொகுதியாகும். முன்னாள் கோட்டூர் பேரூராட்சி துணைத் தலைவர் அஜிஸ் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க-விலிருந்து விலகி தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில் தி.மு.க வில் இணைந்தனர்.

டாக்டர் மகேந்திரன் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி மற்றும் ஐந்து பேரூராட்சிகளில் அதிக ஓட்டு பெற்ற தி.மு.க வெற்றி பெறும் எனவும், மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆறுமாத கால ஆட்சியில் தேர்தல் அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதால் பிற கட்சியிலுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க வில் இணைந்து வண்ணம் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதில் கோட்டூர் நகர தலைவர் பால்ராஜ் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் அரசு வழக்கறிஞர் சேனாதிபதி, தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, ஏ.ஆர்.வி, சாந்தலிங்க குமார், பொள்ளாச்சி நகர துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...