அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள 23 குளங்கள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆற்றின் கரைகளில் 25 குளங்கள் அமைந்துள்ளன. ஆற்றில் நீர்வரத்து இருக்கும் போது இந்த குளங்கள் அனைத்தும் நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கின்றது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உட்பட 23 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீலாம்பூர் குளம் மற்றும் குனியமுத்தூர் சிறுகுளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றது.
கோவையில் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வருவதால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆற்றின் கரைகளில் 25 குளங்கள் அமைந்துள்ளன. ஆற்றில் நீர்வரத்து இருக்கும் போது இந்த குளங்கள் அனைத்தும் நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கின்றது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உட்பட 23 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீலாம்பூர் குளம் மற்றும் குனியமுத்தூர் சிறுகுளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றது.
கோவையில் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வருவதால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.