கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள 23 குளங்கள் முழு கொள்ளவை எட்டின - விவசாயிகள் மகிழ்ச்சி..!

அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள 23 குளங்கள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆற்றின் கரைகளில் 25 குளங்கள் அமைந்துள்ளன. ஆற்றில் நீர்வரத்து இருக்கும் போது இந்த குளங்கள் அனைத்தும் நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கின்றது.

இந்நிலையில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உட்பட 23 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீலாம்பூர் குளம் மற்றும் குனியமுத்தூர் சிறுகுளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றது.

கோவையில் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வருவதால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...