கல்லறை திருநாள்: கோவையில் தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு கிறிஸ்துவர்கள் மலர் அஞ்சலி..!

கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கோவை: இன்று உலகம் முழுவதும் கல்லறை திருநாள் கிறிஸ்துவ மக்களால் அனுசரிக்கப்படுவதை அடுத்து, தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்குக் கல்லறைத் தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைபிடிப்பது வழக்கம்.



அதன் ஒருபகுதியாக, கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்குக் கோவையில் உள்ள கிருத்துவ மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.



இதற்காக, கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் முன்பாக தற்காலிகமாக மலர் கடைகளும், வாசனை திரவிய கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறைத் தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்குக் கல்லறைத் தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.



அதனைத்தொடர்ந்து, கல்லறைகளில் பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரை தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி வழக்கத்திற்கு மாறாக அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...