மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் விடிய விடிய பெய்த கனமழையால் அமைதி நகரில் உள்ள மதுரைவீரன் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அதிகப்படியாக பொள்ளாச்சியில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி 35வது வார்டு அமைதி நகர் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச் சுவர் முழுவதும் சேதமடைந்தது. மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அதிகப்படியாக பொள்ளாச்சியில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி 35வது வார்டு அமைதி நகர் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச் சுவர் முழுவதும் சேதமடைந்தது. மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.