100- நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள 3-மாத சம்பள பாக்கியைப் பெற்றுத்தர வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: நிலுவையில் உள்ள சம்பள பாக்கியைப் பெற்றுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் 100- நாள்வேலை திட்டத்தில் சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை என்றும் சம்பள பாக்கியை பெற்றுதர வலியுறுத்தியும் வேலையாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ள கோவில், தாராபுரம், பொங்கலூர், அவிநாசி, பல்லடம் என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்து வருகின்றனர்.
இதில் பல்லடம் பகுதி சுக்காம் பாளையம் எனும் ஊரில் கடந்த 3-மாதங்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் அந்த சம்பள பாக்கியை பெற்றுத்தர வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் 100- நாள்வேலை திட்டத்தில் சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை என்றும் சம்பள பாக்கியை பெற்றுதர வலியுறுத்தியும் வேலையாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ள கோவில், தாராபுரம், பொங்கலூர், அவிநாசி, பல்லடம் என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்து வருகின்றனர்.
இதில் பல்லடம் பகுதி சுக்காம் பாளையம் எனும் ஊரில் கடந்த 3-மாதங்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் அந்த சம்பள பாக்கியை பெற்றுத்தர வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.