மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்று வர சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டல பகுதிகளில் உள்ள 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. இதில் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் அந்தந்த அதிகாரிகளிடம் கொடுத்து அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 23 இடங்களில் 12 ஆயிரத்து 959 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அந்தந்த அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்களில் முதியோர் உதவி தொகை தொடர்பாக அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் கோரியும் மனுக்கள் வந்துள்ளன. மேலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மனுக்கள் வந்துள்ளன.
கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், தொழில் நிறுவனங்கள் அடிப்படையிலும் சாலை கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.
சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்று வர சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
தேவைக்கு ஏற்ப புதிய சாலைகளும் அமைக்கப்படும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 23 இடங்களில் 12 ஆயிரத்து 959 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அந்தந்த அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்களில் முதியோர் உதவி தொகை தொடர்பாக அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் கோரியும் மனுக்கள் வந்துள்ளன. மேலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மனுக்கள் வந்துள்ளன.
கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், தொழில் நிறுவனங்கள் அடிப்படையிலும் சாலை கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.
சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்று வர சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
தேவைக்கு ஏற்ப புதிய சாலைகளும் அமைக்கப்படும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.