சட்டப் போராட்டம் மூலமே நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின், நானும் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றோம். நீண்ட காலமாக மாணவர்கள் வீடுகளிலிருந்ததால் மன அழுத்தத்திலிருந்தனர்.



தற்போது குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்தாலும், மகிழ்ச்சியுடன் பாடங்களைக் கவனித்து வருகின்றனர். சுழற்சி முறையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலமைச்சரைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் தயவு செய்து தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பள்ளி கல்வித்துறை வேலை முடிந்தது என்று இல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் மேல் படிப்பில் சேர்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதை விட மாணவர்களின் உடல் நலம் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...