அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் மளிகை கடை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம், நியாய விலை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அருகே கேரளா மாநிலம் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் ஏழு யானைகளின் கூட்டம் அங்கு உள்ள நடுபிரட்டு குடியிருப்புக்குள் நுழைந்து, அங்குள்ள செல்வராஜ் மளிகை கடை ஜன்னல் கதவு, சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளிருந்த சர்க்கரை உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் தீ பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்டினர்.
இதனிடையே, அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம், நியாய விலை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், வால்பாறை அருகே கேரளா மாநிலம் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் ஏழு யானைகளின் கூட்டம் அங்கு உள்ள நடுபிரட்டு குடியிருப்புக்குள் நுழைந்து, அங்குள்ள செல்வராஜ் மளிகை கடை ஜன்னல் கதவு, சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளிருந்த சர்க்கரை உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் தீ பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்டினர்.
இதனிடையே, அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.