புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, சித்ரா பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (18). காளப்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக சிட்ரா அருகே உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அப்போது, சிறுநீர் கழிக்க அங்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர், மாணவனிடம் மொபைல்போனை கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை கீறிவிட்டு, 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போனை பறித்து தப்பினர். தலையில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, சித்ரா பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (18). காளப்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக சிட்ரா அருகே உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அப்போது, சிறுநீர் கழிக்க அங்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர், மாணவனிடம் மொபைல்போனை கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை கீறிவிட்டு, 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போனை பறித்து தப்பினர். தலையில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.