தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கோவை: வங்கி, அஞ்சலகம், நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதிக்கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு உருவான நாளான இன்று, கோவை மக்களின் சார்பில் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம், மற்ற மாநிலங்களில் அஞ்சல் மற்றும் வங்கிகளில் கொடுக்கப்படும் படிவங்கள் அவரவர் தாய்மொழிகளில் இருக்கின்றது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தமிழ் மொழியில் படிவங்கள் வழங்கிடவும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.