பொள்ளாச்சியில் தரமற்ற முறையில் தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த 780 கிலோ இனிப்பு வகைகள் அழிப்பு.!!

சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு வகைகள் அழிப்பு. மேலும், பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ டீசலாக மாற்ற கொடுக்க, 90877-90877, 84455-17187, 73395 -30143 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: பொள்ளாச்சியில் தரமற்ற முறையில் பழைய செய்தித்தாள்களை உபயோகப்படுத்துதல், அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல்

பொள்ளாச்சி பகுதியில் நடத்திய ஆய்வில், தரமற்றதாக கண்டறியப்பட்ட, இனிப்புகளை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், தீபாவளியை முன்னிட்டு துறை அதிகாரிகள் தொடர் கள ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

பொள்ளாச்சி நகரிலுள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவற்றில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி ஆகியோர் அடங்கிய குழு நேற்று ஆய்வு நடத்தியது.

இதில், கோவை ரோடு, உடுமலை ரோடு, ராமகிருஷ்ணா நகர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு, வெங்கடேசா காலனி, பெருமாள் செட்டி வீதி, ஆகிய பகுதிகளில், 18 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், பழைய செய்தித்தாள்களை உபயோகப்படுத்துதல், அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை, மண்ணில் குழி தோண்டி, பினாயில் ஊற்றி புதைத்து அழித்தனர். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் இடம், மற்றும் விற்பனை செய்யும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு, உணவுப் பண்டங்களைத் தரமாகத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

கள ஆய்வில், அளவுக்கு அதிகமான இனிப்பு வகைகள் மற்றும் லேபிள் விவரங்கள் சரியாக அச்சிடப்படாமல், மறுபொட்டலமிட்ட கார வகைகளிலிருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பகுப்பாய்வின் முடிவின்படி சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், ஒன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே உண்ணத்தகுந்ததாக இருக்கும். அதற்கு மேல், பாக்டீரியா படிந்து, விஷத்தன்மையுள்ளதாக மாறி விடும்.

எனவே, அன்றைக்குத் தயாரித்து விற்று விட வேண்டும். ஒரு முறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் உணவு தயாரிக்கப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள், பேக்கரிகள், மற்றும் துரித உணவு உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்காணிக்கவும், ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ-டீசல் உற்பத்தி செய்யும் திட்டத்தை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது.-

பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ டீசலாக மாற்ற கொடுக்க, 90877- 90877, 84455- 17187, 73395- 30143 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...