இந்த ஆய்வில் குழந்தைகளுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து, விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக அரசு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது. அரசு சில தளர்வுகள் அறிவித்து கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் இன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
இதனிடையே, அமைச்சரின் திடீர் ஆய்வு மற்றும் குழந்தைகள் உடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தெரிவித்தார்.