மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்து கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தை..! பொதுமக்கள் அச்சம்!

ஆதிமாதையனூர் கிராமத்தில் நேற்று இரவு விவசாய தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூரில் விவசாய தோட்டத்தில் நுழைந்து பத்துமாத கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மேல்பவி, நீலம்பதி, ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான இங்கு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆதிமாதையனூர் கிராமத்தினை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பசுமாடுகள் வளர்த்து வரும் நிலையில், நேற்று இரவு இவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றுள்ளது.



அப்போது, கன்றின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் சிறுத்தையைத் துரத்திச் சென்று உள்ளனர். சிறிது தூரம் சென்று அந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது இதுகுறித்து காரமடை வனத் துறையினரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அதன் கால்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையை வனத்துறை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...