மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்து கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தை..! பொதுமக்கள் அச்சம்!

ஆதிமாதையனூர் கிராமத்தில் நேற்று இரவு விவசாய தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூரில் விவசாய தோட்டத்தில் நுழைந்து பத்துமாத கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மேல்பவி, நீலம்பதி, ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான இங்கு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆதிமாதையனூர் கிராமத்தினை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பசுமாடுகள் வளர்த்து வரும் நிலையில், நேற்று இரவு இவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றுள்ளது.



அப்போது, கன்றின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் சிறுத்தையைத் துரத்திச் சென்று உள்ளனர். சிறிது தூரம் சென்று அந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது இதுகுறித்து காரமடை வனத் துறையினரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அதன் கால்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையை வனத்துறை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...