தாராபுரத்தில் கட்டிடம் கட்டும்போது தூண் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்: தாராபுரத்தில் கட்டிடம் கட்டும்போது தூண் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகே சரவணன் என்பவருக்குச் சொந்தமான கடை ஒன்றைப் புனரமைப்பு பணி செய்தபோது கட்டிடத்தில் முகப்பு கான்கிரீட் தூண் இடிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி தாராபுரம் குளத்தூர் புஞ்சை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மற்றொரு கட்டிட தொழிலாளி பஜனைமட தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை கட்டிட பொறியாளர் பிரபு மற்றும் பொதுமக்கள் மீட்டு படுகாயமடைந்த ரங்கராஜனை மேல்சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தகவலறிந்து தாராபுரம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகே சரவணன் என்பவருக்குச் சொந்தமான கடை ஒன்றைப் புனரமைப்பு பணி செய்தபோது கட்டிடத்தில் முகப்பு கான்கிரீட் தூண் இடிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி தாராபுரம் குளத்தூர் புஞ்சை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மற்றொரு கட்டிட தொழிலாளி பஜனைமட தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை கட்டிட பொறியாளர் பிரபு மற்றும் பொதுமக்கள் மீட்டு படுகாயமடைந்த ரங்கராஜனை மேல்சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தகவலறிந்து தாராபுரம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.