ரீட்ரோ பல்பாா் (Retrobulbar) என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை மூலம் கண் பாா்வை இழப்பில் இருந்து 199 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் (Retrobulbar) என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் கண் பாா்வை இழப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மற்றும் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு கருப்புப் பூஞ்சை என்ற பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புடன் சா்க்கரை போன்ற இணை நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு அதிக அளவு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகிறது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 199 பேருக்கு கண் பாா்வை இழப்பைத் தடுக்கும் விதாக ரீட்ரோ பல்பாா் என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் மருத்துவர் நிா்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு இதுவரை 416 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் 8 பேருக்கு மூளை வரை சென்ற பூஞ்சைப் பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல, பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர பாதிப்பு உள்ளவா்களுக்கு கண் பாா்வை இழப்பைத் தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றாா்.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மற்றும் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு கருப்புப் பூஞ்சை என்ற பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புடன் சா்க்கரை போன்ற இணை நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு அதிக அளவு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகிறது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 199 பேருக்கு கண் பாா்வை இழப்பைத் தடுக்கும் விதாக ரீட்ரோ பல்பாா் என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் மருத்துவர் நிா்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு இதுவரை 416 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் 8 பேருக்கு மூளை வரை சென்ற பூஞ்சைப் பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல, பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர பாதிப்பு உள்ளவா்களுக்கு கண் பாா்வை இழப்பைத் தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றாா்.