எதிர் கட்சியாக இருந்தாலும் அதிமுக கேடயம் போல் மக்களைக் காக்கும்- பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் சூளுரை.!!

கருணாநிதி குடும்பத்திடம் இருந்து மக்களை கேடயமாக அதிமுக பாதுகாத்து வருகிறது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக தான் இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், அதிமுக மக்கள் பணியில் சேவை ஆற்றிடும் என்று பொள்ளாச்சி.V.ஜெயராமன் சூளுரை.


கோவை: எதிர் கட்சியாக இருந்தாலும் கேடயம் போல் மக்களைக் காக்கும் ஒரே கட்சி அதிமுக தான் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் MS நகர் பகுதியில் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.V ஜெயராமன் கொடியேற்றி வைத்து மறைந்த முதல்வர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மற்றும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதான திட்டத்தைத் துவக்கி வைத்தார்.



இதை அடுத்துப் பேசிய அவர், அதிமுகவின் 50-ஆண்டுகளில் 30-ஆண்டு காலம் ஆளும் கட்சியாகவும் 20-ஆண்டுக்காலம் பிரதான எதிர்க்கட்சியாகும் மக்களைக் காத்து வருகிறது.

கருணாநிதி குடும்பத்திடம் இருந்து மக்களைக் கேடயமாக அதிமுக பாதுகாத்து வருகிறது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக தான் இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், அதிமுக மக்கள் பணியில் சேவை ஆற்றிடும் என்று சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ திரு.விஜயகுமார், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...