திருப்பூரில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லம் பாளையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்துவருகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் இணைப்பு என பல்வேறு காரணங்களுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் மழை நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டிற்குள் வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக பழுதடைந்த சாலைகளைச் சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லம் பாளையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்துவருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் இணைப்பு என பல்வேறு காரணங்களுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் மழை நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டிற்குள் வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக பழுதடைந்த சாலைகளைச் சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.