தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வால்பாறையில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வால்பாறையில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒரு வழிச்சாலை ஆகும். இங்குச் சாலையின் இரண்டு புறங்களிலும் கடைகள் உள்ளதால் குறுகிய சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் புத்தாடைகள் பொருட்கள் வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதாலும் அதிக மக்கள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர்.

வால்பாறையில் போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாலும் பொருள்களை வாங்க வரும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் சாலையோரம் கடையின் முன் நிறுத்தி விட்டுச் செல்வதாலும் அதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.
வால்பாறை பகுதியில் வாகன நிறுத்த இடமில்லாமல் உள்ள நிலையில் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவலர்கள் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பண்டிகை காலங்களில் அதிக வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் வால்பாறைக்கு வருவதால் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்து அங்கு வாகனங்களை நிறுத்திச் செல்ல வலியுறுத்துமாறு கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒரு வழிச்சாலை ஆகும். இங்குச் சாலையின் இரண்டு புறங்களிலும் கடைகள் உள்ளதால் குறுகிய சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் புத்தாடைகள் பொருட்கள் வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதாலும் அதிக மக்கள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர்.
வால்பாறையில் போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாலும் பொருள்களை வாங்க வரும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் சாலையோரம் கடையின் முன் நிறுத்தி விட்டுச் செல்வதாலும் அதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.
வால்பாறை பகுதியில் வாகன நிறுத்த இடமில்லாமல் உள்ள நிலையில் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவலர்கள் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பண்டிகை காலங்களில் அதிக வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் வால்பாறைக்கு வருவதால் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்து அங்கு வாகனங்களை நிறுத்திச் செல்ல வலியுறுத்துமாறு கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.