வால்பாறையில் தொலைத் தொடர்பு இல்லாமல் அவதி படும் மக்கள்.!!

வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.



கோவை: வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வருடங்களாக பிஎஸ்என்எல் சேவை சரிவர இயங்காததால் பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.



வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா டிவிஷன் பகுதியில் உபாசி, சின்னக்கல்லார் பெரியகல்லாறு, சின்கோனா, ரயான் போன்ற பகுதிகள் உள்ளன இங்கே சுமார் 5-ஆயிரம் மேற்பட்ட தொழிலாளிகள் குடியிருந்து வருகின்றனர்.

இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளனர். மேலும் அப்பகுதியில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு வருட காலமாக வால்பாறை பகுதியில் முக்கிய தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் சேவை மையம் ஆகும்.

பிஎஸ்என்எல் சேவை மைய அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டால் சரி செய்ய அலுவலகர் இல்லாமல் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புகள் வந்தால் வனத்துறையை அழைப்பதற்காகத் தொலைத்தொடர்பு செயல்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் யானைகளை விரட்ட முடியாமலும் யானைகளின் வருகிற தகவலை வனத்துறையினர் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும், இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.



அதேபோல் அங்குள்ள பள்ளி மாணவ -மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் வாழும் ராஜேந்திரன் என்பவர் தெரிவிக்கிறார்.

இதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு வால்பாறை பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் சேவை மையத்தை நன்கு சீரமைத்துத் தரவும் கூடுதலான பணியாளர்களை அமர்த்தி பிஎஸ்என்எல் சேவை அலுவலகத்தில் முறையாக நடை பெறும்வகையில் பண்ணித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...