மசாஜ் சென்டரில் விபசாரம் செய்த ஒருவரை கைது செய்த போலீசார் 3 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை ரத்தினபுரி அருகே மசாஜ் சென்டரில் விபசாரம் செய்த ஒருவரை கைது செய்த போலீசார் 3 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோவை ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு டாக்டர்ஸ் காலனி பகுதியில் ஹனி ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜான் ஜெரால்டு என்பவர் மசாஜ் செய்வதற்காக நேற்று மதியம் சென்றார்.
அப்போது, அங்கு இருந்த நபர் ஒருவர் ஜான் ஜெரால்ட் இடம் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி பெண்களை காட்டியுள்ளார்.
இதையடுத்து, ஜான் ஜெரால்டு பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறி ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜு ராஜ் (31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 28 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோவை ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு டாக்டர்ஸ் காலனி பகுதியில் ஹனி ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜான் ஜெரால்டு என்பவர் மசாஜ் செய்வதற்காக நேற்று மதியம் சென்றார்.
அப்போது, அங்கு இருந்த நபர் ஒருவர் ஜான் ஜெரால்ட் இடம் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி பெண்களை காட்டியுள்ளார்.
இதையடுத்து, ஜான் ஜெரால்டு பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறி ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜு ராஜ் (31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 28 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.