கோவையில் தலை தீபாவளி கொண்டாடும் 4வது பட்டாலியன் சிறப்புக் காவல் படை போலீசாருக்கு 5 நாட்கள் விடுமுறை..!

தலை தீபாவளி கொண்டாடும் 4வது பட்டாலியனைச் சேர்ந்த கோவை சிறப்புக் காவல் படை போலீசாருக்கு இனிப்பு, பட்டாசுடன் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நாலாவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை செயல்பட்டு வருகிறது.

அங்கு பணி புரியக்கூடிய காவலர்களில் தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கமாண்டன்ட் அங்கு பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை நான்காம் அணியில் பணிபுரியும் அனைத்து போலீசார்குடும்பங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தலை தீபாவளி கொண்டாட இருக்கும் போலீசாருக்கு நவம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளித்து தீபாவளி அன்பளிப்பாக 200 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள், 100 ரூபாய் மதிப்பிலான இனிப்பும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அன்பளிப்பை அந்தந்த குழும அலுவலகத்தில் அல்லது தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த அணியின் தளவாய் என சொல்லப்படும் கமாண்டன்ட் நினைத்தால் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு தங்களுக்குக் கீழ் உள்ள நிதியின் வாயிலாக இவ்வாறு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...