கோவையில் மகனை பள்ளியில் சேர்க்க வந்ததாகக் கூறி ஆசிரியையிடம் 10.5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்..!!

ஆசிரியை அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த காட்டூர் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மகனை பள்ளியில் சேர்க்க வந்ததாக கூறி, ஆசிரியையிடம், 10.5 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வி.கே.கே.மேனன் ரோடு வெங்கிடசாமி லே-அவுட்டை சேர்ந்த பூண்டி என்பவரின் மனைவி அன்புக்கரசி (39). கோவை சின்னசாமி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அன்புக்கரசி பள்ளியில் இருந்த போது, 30 வயது மதிப்புடைய வாலிபர் ஒருவர் அவரை சந்தித்து தன்னுடைய மகனை பள்ளியில் சேர்க்க கட்டணம், தேவையான ஆவணங்கள் குறித்து விசாரித்தார். அன்புக்கரசியும் தேவையான தகவல்களை அவருக்கு தெரிவித்தார்.

அப்போது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மிரட்டி அன்புக்கரசி அணிந்திருந்த, பத்தரை பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசி சத்தமிட்டார்.

ஆனால், சக ஆசிரியர்கள் வருவதற்குள் அந்நபர் மாயமானார். அன்புக்கரசி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த காட்டூர் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...